Pages

Apr 27, 2021

கடிகைமுத்துப் புலவர்

       எட்டையாபுரம் அரசவைப் புலவர் கடிகைமுத்துப் புலவர் மரணப்படுக்கையில் கிடந்தார். அவர் மகள் துணியில் பாலை நனைத்துப் புலவரின் வாயில் பிழிந்தாள். புலவர் கடுமையாக முகத்தைச் சுளித்தார். பக்கத்தில் இருந்த நண்பர் "பால் கசக்கிறதா'"? என்று கேட்டார். புலவர் சொன்னார்:: 

"பாலும் கசக்கவில்லை, பால் பிழிந்த துணியும் கசக்கவில்லை!"


      இதைத்தான் பாவேந்தர் பாரதிதாசன் "சாம்போதும் தமிழ் படித்து ச் சாகவேண்டும் என் சாம்பலும் தமிழ் மணந்து வேகவேண்டும்'" என்று பாடினாரோ?

 

கா.இராமசாமி, பெரிய குளம்

பராபதிக்கோட்டை.

ஒரிசாவில் முகுந்த தேவர் கட்டாக் நகர் அருகில் ஒன்பது மாடிகள் கொண்ட கற்கோட்டை யை கி.பி 989 ல் கட்டினார். மகாநதியும் கத்ஜோடி நதியும் கலக்கும் இடத்தில் இதை 1823ல் வெள்ளையர் அகழாய்வில் இதைக்கண்டு பிடித்தனர்.இதன் முதல்தளம் யானை குதிரை கட்டுமிடம்.2 வது தளம் ராணுவ ஆயுத தளம் 3 காவலர்கள் தங்குமிடம்.4 தொழில் கூடம்.5 சமையல்கூடம்.6 வரவேற்பு க் கூடம்.7 விருந்தினர் தங்குமிடம். 8 அந்தப்புரம்.9அரசர் படுக்கை அறை.


  அக்பரின் அபுல்பாசல் எழுதிய நூல் இதுபற்றிக் கூறுகிறது என்று "இந்திய சரித்திரக் களஞ்சியம்" என்ற நூலில் சிவனடி  கூறுகிறார். கங்க வம்மிச அரசர்கள் தலைநகர் பராபதிக்கோட்டையில் செயல்பட்டது என்பார் அவர்!

கா.இராமசாமி, பெரிய குளம்