Pages

Aug 17, 2011

Fwd: {நாம் தமிழர் பேரியக்கம்} தூக்குக் கொட்டடியிலிருந்து ....


---------- Forwarded message ----------
From: Madhu <rammadhu.dba@gmail.com>
Date: 2011/8/17
Subject: {நாம் தமிழர் பேரியக்கம்} தூக்குக் கொட்டடியிலிருந்து ....
To: thanthaiperiyar@googlegroups.com, beyouths@googlegroups.com, namtamilar <naamtamilar@googlegroups.com>


தூக்குக் கொட்டடியிலிருந்து நான் கேட்பது

உயிர் பிச்சையல்ல ! மறுக்கப் பட்ட நீதி !!

பேரன்புமிக்க அம்மா / அப்பா / சகோதர / சகோதரிகளே,

வணக்கம். நான், அ.ஞா.பேரறிவாளன், இராசீவ் காந்தி கொலை வழக்கில் 19 வயதில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு அதன் விளைவால் தூக்கு தண்டனை பெற்றவனாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் இருந்து வருபவன். எள்முனையளவும் தொடர்பே இல்லாத வழக்கில் அரசியல் காழ்ப்புணர்ச்சியாலும், கேட்க நாதியற்றவன் என்பதாலும், அநீதியான தீர்ப்பை சுமந்து நிற்பவன்.

தந்தை பெரியாரின் கொள்கையால் நிரம்பிய குடும்ப வழி வந்தவன்

என்பதால் மனித நேயத்தின் அடிப்படையிலும், தொப்புள் கொடி உறவு என்பதால், இன உணர்வின் அடிப்படையிலும் சிங்கள இனவாதத்திற்கு எதிரான ஈழத்தமிழர் விடுதலை போராட்டத்தை ஆதரித்து அதற்காக தமிழக மண்ணில் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்தவன் என்ற காரணத்தால் என்மீது தவறான குற்றச்சாட்டு புனையப்பட்டது என்பதை தங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

19 வயது இளைஞனாய் கைது செய்யப்பட்டு, வாழ்வின் வசந்த காலங்களை யெல்லாம் சிறையில் செய்யாத குற்றத்திற்காகத் தொலைத்து, இன்று 40 வயதுடன் பக்குவப் பட்ட குடிமகனாய் உங்கள் முன் இக்கடிதத்தின் மூலம் பேசுகிறேன்.

1. திரு.இராஜீவ் அவர்களின் கொலையை நியாப்படுத்துவதல்ல இக்கடிதத்தின் நோக்கம், மாறாக இக்குற்றத்திற்கு எவ்வித தொடர்புமில்லாத நானும், என்னை போன்றவர்களும் மரணதண்டனைக்கு உரியவர்கள் அல்லர் என்று எடுத்துரைப்பது மட்டுமே.
2. திரு.ராஜீவ் கொலை விஷயமாக விசாரிக்க வேண்டும் என்று சொல்லி 11-06-1991 அன்று விசாரனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நான் இன்று வரை நீதி மறுக்கப்பட்டு தூக்கு மரத்தின் நிழலிலேயே வாழ்ந்து வருகிறேன்.
3. அக்கொலைக்கு பயன்பட்ட "பெல்ட் பாம்" செய்வதற்கு நான் உதவினேன் என்பதே என் தண்டனைக்கு வழிவகுத்தக் குற்றச்சாட்டு. இதற்க்கு ஏதுவாக ஊடகங்களில் பொய் செய்தி பரப்பப்பட்டது. இந்தியா டுடே நாளிதழும் நான் எப்படி வெடிகுண்டு செய்தேன் என்று பொய்யாக ஒரு செய்முறை விளக்கம் வெளியிட்டிருந்தார்கள். ஆனால், "சிபிஐ யால் இறுதிவரை கண்டுப்பிடிக்க முடியாத கேள்விகளுள் ஒன்று, அந்த "பெல்ட் பாம்" ஐ செய்தவர் யார் என்பதே" என்று இந்த வழக்கை விசாரித்த தலைமை புலனாய்வு அதிகாரி திரு, இரகோத்தமன் தான் ஓய்வு பெற்றவுடன் எழுதிய நூலிலும், பல்வேறு பேட்டிகளிலும் கூறியுள்ளார். ஆக விடைத் தெரியா கேள்விக்கு விடையாக நான் பலியிடப் படவேண்டுமா ?

4. அந்த "பெல்ட் பாமிற்கு" 9V பேட்டரி வாங்கித் தந்தேன் என்பதின் மூலமே நான் அந்த "பெல்ட் பாம்" ஐ செய்தேன் என வழக்குரைத்தனர் அரசு தரப்பு வழக்கறிஞர்கள். அதற்க்கு வசதியாக என்னுடைய மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியலில் பட்டய படிப்பும் இவர்களின் கதைக்கு கருவானது. ஆனால் வழக்கின் எந்தவொரு இடத்திலும் நான் வங்கித் தந்த 9V பேட்டரி தான் பெல்ட் பாம் வெடிக்கப்பயன் படுத்தப் பட்டது என்பது நிரூபிக்கப் படவில்லை.
5. உண்மை என்னவெனில் நான் 9V பேட்டரியை வாங்கவுமில்லை, அதனை யாருக்கும் தரவுமில்லை. ஆனால் நான் 9V பேட்டரி வாங்கினேன் என்பதற்கு வழக்கில் உள்ள ஒரே ஆதாரம், ஒரு பெட்டி கடைக்காரரின் சாட்சி தான். இந்த சாட்சியை ஏற்க முடியாது என்று தடா நீதிமன்றத்தில் கூறிய நீதிபதி பிறகு என்ன காரணத்தினாலோ இந்த சாட்சியை ஏற்றுக்கொண்டுவிட்டார். நான் வாங்காத பேட்டரியை வாங்கினேன் என்று ஒருவர் மூலம் சொல்லவைப்பது நம் காவல்துறைக்கு எத்தனை சுலபம் என்று சற்றே சிந்தியுங்கள்.
6. தடா சட்டத்தில் இவ்வழக்கு விசாரிக்கப் பட்டதே தவறு என்று உச்சநீதி மன்றம் இடித்துரைத்தது. காரணம் இந்த கொலை குற்றவாளிகளுக்கு கொலை செய்யப்பட்டவர் தவிர யாதொருவரையும் அச்சுறுத்தவோ, கொல்லவதோ நோக்கம் இருந்திருக்கவில்லை என்று எடுத்துரைத்தது.

அப்படி இருக்கும் வேளையில், எங்களை தடா சட்டத்தின் கீழ் கைது செய்து, உரிமைகள் மறுக்கப்பட்டு, தடா சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு பெறப்பட்ட வாக்குமூலம் மட்டும் எப்படி செல்லுபடியாகும்?

மேலும் நம் நாட்டில் வாக்குமூலங்கள் எப்படிப் பெறப்படுகின்றன என்பதும் உங்களுக்கு நன்றாகவே தெரியும். கடுமையான சித்திரவதை, மிரட்டல், அடி உதைக்கு பயந்து தான் பல வாக்கு மூலங்கள் ரத்தத்தால் கையழுத்தாகின்றன. பொதுவாக அப்படிப் பெறப் படும் வாக்கு மூலங்களை மட்டுமே வைத்து நீதிமன்றங்கள் தீர்ப்பினைத் தருவது கிடையாது, ஆனால் என் வழக்கில் மட்டும் நீதிமன்றம் அவ்வாக்குமூலத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, வேறு எந்த ஆதாரமும் இல்லாமல் எனக்குத் தூக்குத் தண்டனை வழங்கியுள்ளது.

1. ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவு செய்த திரு.தியாகராஜன் கேரளா மாநிலத்தில் 1993 ல் நடைபெற்ற அருட்சகோதரி.அபயா கொலைவழக்கை "தற்கொலை" என முடிக்க அழுத்தம் கொடுத்தவர் என்பதும் அவரது முறைகேட்டை எதிர்த்து அவருக்கு கீழ் பணிபுரிந்த துணை காவல் கண்காணிப்பாளர் திரு.தாமஸ் வர்கீஸ் என்பவர் தனது பதவியை துறந்தார் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். பிறகு இது பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை என்று திரும்பியது. எர்ணாகுளம் தலைமை நீதிமன்ற நடுவர் அவர்கள் 23-06-2000 அன்று அளித்த தீர்ப்பில் கடுமையான கண்டனங்களை வாங்கியவர் இந்த தியாகராஜன். இவர் என்னிடம் வாங்கிய வாக்குமூலங்கள் ஏன் உண்மையாக இருக்கவேண்டும்? யாருக்காகவோ வழக்கை எப்படியும் வளைப்பவர்கள் தானே இவர்கள்..
2. தடா சட்டத்தில், சிறப்பு தனி நீதி மன்றத்தில் இவ்வழக்கு விசாரிக்கப் பட்டதால், பெரும்பான்மையான உரிமைகள் எனக்கு மறுக்கப் பட்டன, அதுவே என் தரப்பு நியாயங்களை எடுத்துக் கூற இயலாமற் செய்துவிட்டது. பொதுவாக ஒரு மாவட்ட நீதி மன்றம் வழங்கும் தீர்ப்பிற்கு, உயர் நீதி மன்றம், பிறகு உச்ச நீதி மன்றம் என்று இரு முறை மேல் முறையீடு செய்யும் வாய்ப்பு உள்ளது. இந்த செயல்பாடு ஒரு இடத்தில் இல்லாவிட்டாலும் மறு இடத்தில் நீதி சரியாக கிடைக்க உதவி வந்தது. ஆனால் எங்கள் விஷயத்தில் தடா கொடுங்கோல் வழக்கு என்பதால், உயர்நீதி மன்றம் செல்லும் வாய்ப்பு மறுக்கப்பட்டு இரண்டில் ஒரு மன்றத்தின் கதவு அடைப்பட்டு போனது. இப்பொழுது தடா நடைமுறை தவறு என்று அந்த சட்டமே நம் நாட்டில் வாபஸ் பெறப்பட்டாலும், அதனால் பாதிக்கப்பட்ட என் போன்றவர்களுக்கு எப்படி நீதி கிடைக்கும், எப்பொழுது கிடைக்கும்.




Aug 15, 2011

Fwd: {நாம் தமிழர் பேரியக்கம்} பேரன்புமிக்க அம்மா / அப்பா / சகோதர / சகோதரிகளே வணக்கம்: தூக்குக் கொட்டடியிலிருந்து நான் கேட்பது உயிர் பிச்சையல்ல! மறுக்கப் பட்ட நீதி



---------- Forwarded message ----------
From: Muthamizh Vendhan <muthamil78@gmail.com>
Date: 2011/8/14
Subject: {நாம் தமிழர் பேரியக்கம்} பேரன்புமிக்க அம்மா / அப்பா / சகோதர / சகோதரிகளே வணக்கம்: தூக்குக் கொட்டடியிலிருந்து நான் கேட்பது உயிர் பிச்சையல்ல! மறுக்கப் பட்ட நீதி
To: anbudan@googlegroups.com, beyouths@googlegroups.com, canadatamil@googlegroups.com, currenttamilnews@googlegroups.com, dinamorukural@googlegroups.com, eelatamilfriends@googlegroups.com, elanthamizhar@googlegroups.com, ethiricom@googlegroups.com, germantamil@yahoogroups.com, houstontamil@googlegroups.com, illam@googlegroups.com, indonesiatamilosai@googlegroups.com, indrayakural@googlegroups.com, keetru@googlegroups.com, malaysiantamilbloggers@googlegroups.com, minTamil@googlegroups.com, muslimmails@googlegroups.com, muththamiz@googlegroups.com, naalorunool@googlegroups.com, naamtamilar@googlegroups.com, nallanampikkai@googlegroups.com, namakunamae@googlegroups.com, nambikkai@googlegroups.com, namthozharkal@googlegroups.com, nanjilnadan@googlegroups.com, oviyathamizh@gmail.com, pagalavan@googlegroups.com, panbudan@googlegroups.com, periyarvizhippunarvuiyakkam-europe@googlegroups.com, piravakam@googlegroups.com, puduvaibloggers@googlegroups.com, save-tamils@googlegroups.com, siragukal@googlegroups.com, Tamil2Friends@googlegroups.com, tamilamutham@googlegroups.com, tamilinayam@googlegroups.com, tamilmagal@googlegroups.com, tamilmuslimbrothers@googlegroups.com, tamilnewsinfo@googlegroups.com, thamilvaddam@yahoogroups.com, thamizhargal@googlegroups.com, thamizhengalkural@googlegroups.com, thamizholi@googlegroups.com, thamizhthendral@googlegroups.com, thamiziisc@googlegroups.com, thanthaiperiyar@googlegroups.com, thiru-thoazhamai@googlegroups.com, thirumavalavan@googlegroups.com, unitamil-gt@googlegroups.com, vijaymakkaliyakkam@googlegroups.com, "tamil_ulagam@googlegroups.com" <tamil_ulagam@googlegroups.com>, tamilmanram <tamilmanram@googlegroups.com>, உலகத்தமிழ் <worldtamil@googlegroups.com>, தமிழாயம் <thamizayam@googlegroups.com>, may17members@googlegroups.com, lightacandlefortamils@googlegroups.com, muthu.tamil78@gmail.com, Muthamizh Vendhan <3tamil78@gmail.com>, muthamizh78@gmail.com



பேரன்புமிக்க அம்மா / அப்பா / சகோதர / சகோதரிகளே,

வணக்கம். 

நான், அ.ஞா.பேரறிவாளன், இராசீவ் காந்தி கொலை வழக்கில் 19 வயதில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு அதன் விளைவால் தூக்கு தண்டனை பெற்றவனாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் இருந்து வருபவன். எள்முனையளவும் தொடர்பே இல்லாத வழக்கில் அரசியல் காழ்ப்புணர்ச்சியாலும், கேட்க நாதியற்றவன்  என்பதாலும், அநீதியான தீர்ப்பை சுமந்து நிற்பவன்.

தந்தை பெரியாரின் கொள்கையால் நிரம்பிய குடும்ப வழி வந்தவன்

என்பதால் மனித நேயத்தின் அடிப்படையிலும், தொப்புள் கொடி உறவு என்பதால், இன உணர்வின்  அடிப்படையிலும் சிங்கள இனவாதத்திற்கு எதிரான ஈழத்தமிழர் விடுதலை போராட்டத்தை ஆதரித்து அதற்காக தமிழக மண்ணில் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்தவன் என்ற காரணத்தால் என்மீது தவறான குற்றச்சாட்டு புனையப்பட்டது  என்பதை தங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

19 வயது இளைஞனாய் கைது செய்யப்பட்டு, வாழ்வின் வசந்த காலங்களை யெல்லாம் சிறையில் செய்யாத குற்றத்திற்காகத் தொலைத்து, இன்று 40 வயதுடன் பக்குவப் பட்ட குடிமகனாய் உங்கள் முன் இக்கடிதத்தின் மூலம் பேசுகிறேன்.

  1. திரு.இராஜீவ் அவர்களின் கொலையை நியாப்படுத்துவதல்ல இக்கடிதத்தின் நோக்கம், மாறாக இக்குற்றத்திற்கு எவ்வித தொடர்புமில்லாத நானும், என்னை போன்றவர்களும்  மரணதண்டனைக்கு உரியவர்கள் அல்லர் என்று எடுத்துரைப்பது மட்டுமே.
  2. திரு.ராஜீவ் கொலை விஷயமாக விசாரிக்க வேண்டும் என்று சொல்லி 11-06-1991  அன்று விசாரனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட  நான் இன்று வரை நீதி மறுக்கப்பட்டு தூக்கு மரத்தின் நிழலிலேயே வாழ்ந்து வருகிறேன்.
  3. அக்கொலைக்கு பயன்பட்ட "பெல்ட் பாம்" செய்வதற்கு நான் உதவினேன் என்பதே என் தண்டனைக்கு வழிவகுத்தக் குற்றச்சாட்டு. இதற்க்கு ஏதுவாக ஊடகங்களில் பொய் செய்தி பரப்பப்பட்டது. இந்தியா டுடே நாளிதழும் நான் எப்படி வெடிகுண்டு செய்தேன் என்று பொய்யாக ஒரு செய்முறை விளக்கம் வெளியிட்டிருந்தார்கள்.  ஆனால்,  "சிபிஐ யால் இறுதிவரை கண்டுப்பிடிக்க முடியாத கேள்விகளுள் ஒன்று, அந்த  "பெல்ட் பாம்" ஐ செய்தவர் யார் என்பதே" என்று இந்த வழக்கை விசாரித்த தலைமை புலனாய்வு அதிகாரி திரு, இரகோத்தமன் தான் ஓய்வு பெற்றவுடன் எழுதிய நூலிலும், பல்வேறு பேட்டிகளிலும் கூறியுள்ளார். ஆக விடைத் தெரியா கேள்விக்கு விடையாக நான் பலியிடப் படவேண்டுமா ?
  4. அந்த "பெல்ட் பாமிற்கு" 9V பேட்டரி வாங்கித் தந்தேன் என்பதின் மூலமே நான் அந்த "பெல்ட் பாம்" ஐ செய்தேன் என வழக்குரைத்தனர் அரசு தரப்பு வழக்கறிஞர்கள். அதற்க்கு வசதியாக என்னுடைய மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியலில் பட்டய படிப்பும் இவர்களின் கதைக்கு கருவானது. ஆனால் வழக்கின் எந்தவொரு இடத்திலும் நான் வங்கித் தந்த 9V பேட்டரி தான் பெல்ட் பாம் வெடிக்கப்பயன் படுத்தப் பட்டது என்பது  நிரூபிக்கப் படவில்லை.
  5. உண்மை என்னவெனில் நான் 9V பேட்டரியை வாங்கவுமில்லை, அதனை யாருக்கும் தரவுமில்லை. ஆனால் நான் 9V பேட்டரி வாங்கினேன் என்பதற்கு வழக்கில் உள்ள ஒரே ஆதாரம், ஒரு பெட்டி கடைக்காரரின் சாட்சி தான். இந்த சாட்சியை ஏற்க முடியாது என்று தடா நீதிமன்றத்தில் கூறிய நீதிபதி பிறகு என்ன காரணத்தினாலோ இந்த சாட்சியை ஏற்றுக்கொண்டுவிட்டார். நான் வாங்காத பேட்டரியை வாங்கினேன் என்று ஒருவர் மூலம் சொல்லவைப்பது நம் காவல்துறைக்கு எத்தனை சுலபம் என்று சற்றே சிந்தியுங்கள்.
  6. தடா சட்டத்தில் இவ்வழக்கு விசாரிக்கப் பட்டதே தவறு என்று உச்சநீதி மன்றம் இடித்துரைத்தது. காரணம் இந்த கொலை குற்றவாளிகளுக்கு கொலை செய்யப்பட்டவர் தவிர யாதொருவரையும் அச்சுறுத்தவோ, கொல்லவதோ நோக்கம் இருந்திருக்கவில்லை என்று எடுத்துரைத்தது.

அப்படி இருக்கும் வேளையில், எங்களை தடா சட்டத்தின் கீழ் கைது செய்து, உரிமைகள் மறுக்கப்பட்டு, தடா சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு பெறப்பட்ட வாக்குமூலம் மட்டும் எப்படி செல்லுபடியாகும்?

மேலும் நம் நாட்டில் வாக்குமூலங்கள் எப்படிப் பெறப்படுகின்றன என்பதும் உங்களுக்கு நன்றாகவே தெரியும். கடுமையான சித்திரவதை, மிரட்டல், அடி உதைக்கு பயந்து தான் பல வாக்கு மூலங்கள் ரத்தத்தால் கையழுத்தாகின்றன. பொதுவாக அப்படிப் பெறப் படும் வாக்கு மூலங்களை மட்டுமே வைத்து நீதிமன்றங்கள் தீர்ப்பினைத் தருவது கிடையாது, ஆனால் என் வழக்கில் மட்டும் நீதிமன்றம் அவ்வாக்குமூலத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, வேறு எந்த ஆதாரமும் இல்லாமல் எனக்குத் தூக்குத் தண்டனை வழங்கியுள்ளது. 

  1. ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவு செய்த திரு.தியாகராஜன் கேரளா மாநிலத்தில் 1993 ல் நடைபெற்ற அருட்சகோதரி.அபயா கொலைவழக்கை "தற்கொலை" என முடிக்க அழுத்தம் கொடுத்தவர் என்பதும் அவரது முறைகேட்டை எதிர்த்து அவருக்கு கீழ் பணிபுரிந்த துணை காவல் கண்காணிப்பாளர் திரு.தாமஸ் வர்கீஸ் என்பவர் தனது பதவியை துறந்தார் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். பிறகு இது பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை என்று திரும்பியது. எர்ணாகுளம் தலைமை நீதிமன்ற நடுவர் அவர்கள் 23-06-2000 அன்று அளித்த தீர்ப்பில் கடுமையான கண்டனங்களை வாங்கியவர் இந்த தியாகராஜன். இவர் என்னிடம் வாங்கிய வாக்குமூலங்கள் ஏன் உண்மையாக இருக்கவேண்டும்? யாருக்காகவோ வழக்கை எப்படியும் வளைப்பவர்கள் தானே இவர்கள்.. 
  2. தடா சட்டத்தில், சிறப்பு தனி நீதி மன்றத்தில் இவ்வழக்கு விசாரிக்கப் பட்டதால், பெரும்பான்மையான உரிமைகள் எனக்கு மறுக்கப் பட்டன, அதுவே என் தரப்பு நியாயங்களை எடுத்துக் கூற இயலாமற் செய்துவிட்டது. பொதுவாக ஒரு மாவட்ட நீதி மன்றம் வழங்கும் தீர்ப்பிற்கு, உயர் நீதி மன்றம், பிறகு உச்ச நீதி மன்றம் என்று இரு முறை மேல் முறையீடு செய்யும் வாய்ப்பு உள்ளது. இந்த செயல்பாடு ஒரு இடத்தில் இல்லாவிட்டாலும் மறு இடத்தில் நீதி சரியாக கிடைக்க உதவி வந்தது. ஆனால் எங்கள் விஷயத்தில் தடா கொடுங்கோல் வழக்கு என்பதால், உயர்நீதி மன்றம் செல்லும் வாய்ப்பு மறுக்கப்பட்டு இரண்டில் ஒரு மன்றத்தின் கதவு அடைப்பட்டு போனது. இப்பொழுது தடா நடைமுறை தவறு என்று அந்த சட்டமே நம் நாட்டில் வாபஸ் பெறப்பட்டாலும், அதனால் பாதிக்கப்பட்ட என் போன்றவர்களுக்கு எப்படி நீதி கிடைக்கும், எப்பொழுது கிடைக்கும்.
  3. தடா நீதிமன்றத்தின் கீழ் விசாரிக்கப்படுபவர்கள் 20 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என தடா சட்ட வரம்பு சொல்கிறது.
  4. அவர் முன்னாள் குற்றம் ஏதும் புரிந்தவரா என்பதை கவனிக்க வேண்டும்.
  5. குற்றப் பின்னனி உள்ள குடும்பத்தை சார்ந்தவரா என்பதும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவேண்டும் என்கிறது தடா நீதிமன்றம்.
  6. பேரறிவாளனுக்கு மட்டும் இந்த எந்த வரைமுறைகளையும் கடைபிடிக்காமல் தடாவின் கீழ் கைது செய்து விசாரித்து, தண்டனையும் அறிவித்தார்கள்
  7. சிறப்பு நீதிமன்றத்தில் 26 பேருக்குத்  தூக்குத் தண்டனை வழங்கப் பட்ட நிலையில் உச்சநீதி மன்றம் அதில் 22 தூக்குத் தண்டனைகளை ரத்து செய்கிறதென்றால், இவ்வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் எத்தன்மையுடன் ஒருதலைப்பட்சமாக, முன்முடிவுகளுடன் விசாரிக்கப் பட்டதென்பது தங்களுக்குப் புலப் படும். சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்று இருந்தாலும், இந்த வழக்கை பொருத்தவரை கொல்லப்பட்டவர் ராஜீவ் என்பதாலும், அவருக்கு இருந்த செல்வாக்கு மற்றும் ஊடக அனுகூலங்களாலும், ஒரு தலைபட்சமாகவே பார்க்கப்பட்டது.   

இன்னொரு வாய்ப்பு கிடைக்கப்பெற்றுநடுநிலையுடன் விசாரிக்கப் பட்டால் எங்களது தூக்குக் கயிறும் கண்டிப்பாக அறுபடும் என்று என்னால் உறுதியாக கூற முடியும். அந்த வசதி இங்கிலாந்து உள்ளிட்ட மேலை நாடுகளில் உள்ளது. ஆனால் இனி வழக்கை விசாரிக்கும் வழியில்லை என்கிறது இந்திய குற்றவியல் சட்டம்.. ஆகையால் கருணை மனுவின் மீதான முடிவே இறுதி முடிவு என்று விடப்பட்ட பரிதாபத்துக்குரியவர்கள் ஆகிப்போனோம் நாங்கள். நான் நிரபராதி, நான் நிரபராதி என்று கத்திக் கொண்டிருக்கும் பொழுதே என் குரல் வளை தூக்குக்கயிற்றால் நசுக்கப்படுமோ

  1. திருமதி. சோனியா காந்தி அவர்கள் இவ்வழக்கில் தூக்குத் தண்டனைப் பெற்றவர்களுக்கு  அத்தண்டனை நிறைவேற்றப் படவேண்டும் என்பதில் எனக்கோ என் குழந்தைகளுக்கோ (இராகுல் காந்தி, பிரியங்கா காந்தி) சற்றும் விருப்பமில்லை எனக் கூறியுள்ளார்.
  2. ஆயினும் எங்களை 20 ஆண்டுகளாக இப்படி சிறையில் அடைத்து வைத்திருக்கும் மர்மம் எங்களுக்கு விளங்கவில்லை. நிரபராதிகளான எங்களை இப்படி தூக்கு கொட்டடியிலேயே வைத்திருக்கும் காரணம் புரியவில்லை.
  3. 1980-களின் இறுதியில் வாழ்ந்த எல்லா இளைஞர்களை போல் நானும் ஈழ விடுதலையிலும், விடுதலைப் போராளிகளின் மேலும் பற்று கொண்டிருந்தேன். அன்று கல்லூரிகளிலும், பணி இடங்களிலும் எல்லோரும் தான் விடுதலை போராட்டத்திற்காக உதவி வந்தார்கள். ஒரு நாள் கூலியை கொடுத்தார்கள். பள்ளிகளில் நன்கொடை வசூலித்தார்கள். ஏன் நம் மத்திய மாநில அரசுகள் கூடத்தான் அவர்களுக்கு உதவிகள் புரிந்தார்கள். ஒரு துர்ச் சம்பவம் நிகழும்பொழுது நான் மட்டும் எப்படி எதிரி ஆகிப்போனேன்?? ஏன் தனிமை படுத்தப்பட்டேன்??  உங்களில் ஒருவன் தானே நானும்??

தூக்குத் தண்டனை என்பது சட்டத்தின் பெயரால் செய்யப் படும் திட்டமிட்ட படுகொலை என்கிறார் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி நீதியரசர் திரு.வீ. ஆர். கிருஷ்ணய்யர்.

செய்த குற்றத்திற்கு வழங்கப் படும் தூக்குத் தண்டனையே திட்டமிட்டப் படுகொலையெனில், செய்யாத குற்றத்திற்கு வழங்கப் படும் தூக்குத் தண்டனையை என்னவென்று சொல்வது?

2.  முடிவுறா விசாரனையில், முடிவினை நோக்கித் தள்ளப்படும் அப்பாவி நிரபராதிகளின் வாழ்க்கை.

  • ராசீவ் வழக்கை விசாரிக்க  அமைக்கப்பட்ட வர்மா கமிசன் பாதியில் முடக்கப்பட்ட்து.
  • ஜெயின் கமிசன் அறிக்கையில் காங்கிரஸ்கார்ர்கள் ஒத்துழைக்கவில்லை என்ற அறிக்கையோடு நிறுத்தப் பட்டது.
  • மறுவிசாரனை, வெளிப்படையாக நடைபெறுதல் அவசியம் என வலியுறுத்தப்பட்டும் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை
  • உலகம் முழுவதும் போற்றப்படும் முன்னாள் உச்ச நீதி மன்ற நீதியரசர் வீ.ஆர் கிருஷ்ண அய்யர், திரு.பேரறிவாளின் மடலையும் , வழக்கையும்  படித்துவிட்டு பேரறிவாளான் நிரபராதி என்று வலியுறுத்தியது மட்டுமல்லாமல் அவரை தண்டனைகுறைப்பு செய்து உடனடியாக சிறையில் இருந்த காலங்களை கணக்கில் கொண்டு விடுதலை செய்ய வேண்டும் என அனைத்து முன்னாள் சனாதிபதிகளுக்கும், பிரதமருக்கும் சோனியா காந்திக்கும்,  இன்னால் சனாதிபதிக்கும்,பிரதமருக்கும் மேலும் தமிழ் நாட்டின் முன்னாள் முதலைமைச்சருக்கும் தனிப்பட்ட முறையில் அழுத்தம் கொடுத்தார்.
  • முன்னாள் மத்திய சட்டஅமைச்சர் ராம்ஜெத் மலானி , இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்வதற்கான அனைத்து முகாந்திரங்களும் இருப்பதாக அவர் அமைச்சராக இருக்கும் போதே அறிவித்தார்.
  • முன்னாள் மும்பை உச்ச நீதிமன்ற நீதிபதி எச். சுரேஸ் அவர்களும் பேரறிவாளனை தண்டனை குறைப்பு செய்து விடுதலை செய்ய அனைத்து தகுதிகளும் உள்ளதாக அறிவித்தார்.
  • சோனியா காந்தி அவர்கள், எனக்கோ என் மகனுக்கோ என் மகளுக்கோ இவர்களை தூக்கிலிடுவதில் எங்களுக்கு விருப்பமில்லை. உங்களிடம் (சனாதிபதியிடம்) கருணை மனு வரும்பொழுது இவர்களுக்கு தண்டனை குறைப்பு செய்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கடிதம் எழுதியிருக்கிறார்.
  • கேரளா கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில், முறைகேடுகள் செய்து நீதிமன்றத்தால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்ட புலனாய்வு அதிகாரி திரு.தியாகராஜன் அவர்கள் பேரறிவாளனிடம் எடுத்ததாக சொல்லப்படும் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
  • இந்த வழக்கின் மூலமாக ஈழ விடுதலைப் போராட்டத்தை தடுத்து நிறுத்துவதும், அந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த தமிழக மக்களை கடுமையாக அச்சுறுத்துவதுமே, நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 

3.  பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாளின் கோரிக்கை.

இருபத்தியோரு ஆண்டுகள் பொறுமையுடன் காத்திருந்து கருணை மனுவை மட்டுமே நம்பி இன்று ஏமாற்றத்தின் உச்சியில் இருக்கின்றேன்.. வழக்கில் இத்தனை குளறுபடிகள், முடிவடையாத விசாரணைகள், கண்டுபிடிக்க முடியாத முடிச்சுகள், இருப்பதை காரணம் கொண்டு நிரபராதியான என் மகன் உறுதியாக விடுவிக்கப்படுவான் என்று நம்பி இருந்தேன்..

உலகில் எங்கும் நடக்காத அநியாயமாக காந்திய நாடு என்று சொல்லிக்கொள்ளும், அஹிம்சையை போற்றும் இந்திய நாட்டில், ஒருவன் நிரபராதி, நிரபராதி என்று கதறிக்கொண்டிருக்கும்பொழுதே தூக்குலிட துடிக்கிறது காங்கிரஸ் அரசாங்கம்.

மக்களிடம் நான் சொல்ல விரும்புவதெல்லாம் ஒன்று தான். பத்திரிக்கைகள் சித்தரித்தது போல் ராஜீவ் கொலையாளி, விடுதலை புலி என்று ஒருதலைப்பட்சமாக பார்க்காமல், அவனையும் ஒரு சக மனிதனாக மட்டுமே பாருங்கள். அவன் நிரபராதி என்று உரக்க கூறுவதை சற்றே கவனியுங்கள். அவனுக்கும் ராஜீவ் கொலை சதிக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை.

இனி மக்களாகிய நீங்கள் உணர்ந்து, உங்கள் கருத்தை உரக்கச் சொன்னால் மட்டுமே என் மகனும் அவனை போல் மற்ற இருவரும் உயிர் பிழைக்க வாய்ப்பிருக்கிறது.

தாய்மார்கள் ஒரு தாயின் தவிப்பை உணர்ந்து, என் மகனின் உயிர் மீட்பு போராட்டத்தில் கண்டிப்பாக என்னுடன் வருவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

மாணவர்களும், சட்ட வல்லுனர்களும் ஒரு வரலாற்று தவறு நிகழ்வதை இப்பொழுதே தடுக்க வேண்டும்.

மனிதஉரிமை ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும், அரசியல் தலைவர்களும் இவர்களின் தண்டனையை மறுபரிசீலனை செய்ய  ஒருசேர உரத்து குரல் கொடுக்க வேண்டும். இனியும் காலம் இல்லை என்பதை நான் சொல்லத் தேவை இல்லை என்று நம்புகிறேன்.

தமிழக மக்களின் பேராதரவுடன் இப்பொழுது ஆட்சி செய்யும் முதல்வர், தனது தற்போதைய செயல்பாடுகளினால் உலக தமிழர் அனைவரின் மனங்களிலும் போற்றப்படும் தாயாக உயர்ந்துள்ளார். அவர் தாயுள்ளம் கொண்டு, என் ஒரே மகனின் குற்றமற்ற தன்மையை உணர்ந்து, அவன் உயிர் காக்கும் அணைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று மிக பணிவுடனும், நம்பிக்கையுடனும் கோரிக்கை வைக்கிறேன்.. நாதியற்ற இந்த தாய்க்கு வேறு வழி இல்லை.

*********************************************************

ஆமாம் நான் தமிழன் தான்,ஆனால்…

ஆனால் ராஜிவ் கொலையாளிகள், அப்சல் குரு போன்றோருக்கு கொடுத்திருக்கும் தூக்கு தண்டனையையும் எதிர்க்கிறேன் இதை பற்றி என் சுற்றத்திலும், மக்களிடமும் பிராச்சாரம் செய்வேன்.அப்சல் குருவுக்கும் சேர்த்து போராடுவதில் தமிழனாக எனக்கு பெருமையே.

அதே நேரம் நான் பேரறிவாளனுக்காக மட்டும் போராடவில்லை, அமைதிப்படை நடத்திய கொலைகளுக்கு எதிர்விணையான ராஜிவை கொலை செய்த இதர இரண்டு பேருக்கும் சேர்த்தே தான் போராடப் போகிறேன்.

கடைசி கட்டமும் தாண்டியாயிற்று, மனித உயிர் போகிறது என்று மனிதாபிமானம் மட்டும் இதற்க்கு காரணமில்லை.அதிகார வர்கம் ஆதிக்க வர்கத்திற்க்கொரு நீதியும், சாதரண மக்களுக்கு ஒரு நீதியும் வைத்துக்கொண்டு வெட்கமின்றி இருக்கிறதே அதை அம்பலபடுத்த வேண்டுமென போராடுகிறேன்.

சுய‌ந‌லமாய் ச‌ந்தர்ப‌வாதியாய் போராடப்போவ‌தில்லை ஏனென்றால் இந்த உண்மையான‌ போராட்ட‌த்தில் என‌க்கு வீழ்ச்சியே இல்லை.. (நன்றி: அக்னிப் பார்வை)

Plea to cancel the death sentence wrongly given to innocent Perarivalan

http://www.change.org/petitions/plea-to-cancel-the-death-sentence-wrongly-given-to-innocent-perarivalan

Her Excellency Smt. Pratibha Devisingh Patil [President of India]
presidentofindia@rb.nic.in

Sri M.Hamid Ansari [Vice-President of India]
vpindia@nic.in

His Excellency Mr. Manmohan Singh [Prime Minister of India]
manmohansingh@sansad.nic.in

Shri L.K. Advani [Leader of Opposition in the Lok Sabha]
advanilk@sansad.nic.in

Mr. P.CHIDAMBARAM [Home Minister of India]
hm@nic.in

Hon'ble Mr. Justice S.H. Kapadia [Supreme Court of India]
supremecourt@nic.in

Smt.Sonia Gandhi [President, Indian National Congress]
soniagandhi@sansad.nic.in

Smt.Meira Kumar [Hon'ble Lok Sabha Speaker]
speakerloksabha@sansad.nic.in

His Excellency Thiru Surjit Singh Barnala [Governor of Tamil Nadu]
govsec@tn.nic.in

Dr. J. Jayalalitha [Chief Minister of the state of Tamil Nadu]
cmcell@tn.gov.in

Hon. Justice Shri K.G. Balakrishnan [National Human Rights Commission of India]
chairnhrc@nic.in

Send Email to International Community against Death Penalty
World Coalition Against the Death Penalty
Council of Europe Theme File on Death Penalty
Amnesty International Website Against the Death Penalty
Amnesty International-USA's Program to Abolish the Death Penalty
Death Penalty Information Center (USA)
European Day against the death penalty (Council of Europe)


tom.mackey@amnesty.org
press@amnesty.org
AmnestyIntl@amnesty.eu
iec@amnesty.org
secgen@amnesty.org
Dominic.mineo@amnesty.org.au
info@amnesty.org.nz
hrwpress@hrw.org
Eleanor.Hevey@hrw.org
press@amnesty.org.uk
feedback@humanrightsfirst.org
nyc@lchr.org
admin-au@amnesty.org
admin-bd@amnesty.org
admin-hk@amnesty.org
admin-jp@amnesty.org
amnestyis@amnesty.org
admin-np@amnesty.org
admin-nz@amnesty.org
admin-pt@amnesty.org
admin-ko@amnesty.org
admin-ta@amnesty.org
admin-th@amnesty.org
aimember@aiusa.org
aiusama@aiusa.org
aiusamw@aiusa.org
aiusane@aiusa.org
aiusaso@aiusa.org
aiusasf@aiusa.org
amnesty-is@mcr1.geonet.de
eng@amnesty.org
admin-mc@amnesty.org
info@amnesty.ca
toronto@amnesty.ca
vancouver@amnesty.ca
dwright@amnesty.ca
jpeters@amnesty.eu
info@amnesty.or.jp
amnesty@tm.net.my
aimncc@magicnet.mn
info@amnestynepal.org
campaign@amnesty.org.nz
amnesty@cyber.net.pk
section@amnesty.org.ph
aitaiwan@seed.net.tw
info@amnesty.or.th
information@deathpenalty.org
jeanne@deathpenalty.org
stefanie@deathpenalty.org
sara@deathpenalty.org
yoko@deathpenalty.org
judy@deathpenalty.org
aqeela@deathpenalty.org
aarti@deathpenalty.org
darryl@deathpenalty.org
ezitrin@deathpenalty.org
dpic@deathpenaltyinfo.org
info@abolishdeathpenalty.org
speaker@abolishdeathpenalty.org
media@abolishdeathpenalty.org
webmaster@abolishdeathpenalty.org
volunteers@abolishdeathpenalty.org
troyanthonydavis@yahoo.com
nhile@orrick.com
info@freekevincooper.org
freerobwill@gmail.com
contact@worldcoalition.org
info@ncadp.org
mj.cocher@fiacat.org
g.colin@fiacat.org
n.jeannin@fiacat.org
visites@coe.int
CommissionerHR.Communication@coe.int
cm@coe.int
deathpenaltyinfo@law.northwestern.edu
Muthamizh
Chennai


























































































































































--
பூவேந்திரன்

பேரறிவாளன், சாந்தன், முருகன் உயிர்காக்க நிதி தாரீர்

முழுமையாக விசாரணை நிறைவுறாத இராஜீவ் கொலை வழக்கில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு, செய்யாத குற்றத்திற்காக சகோதரர்கள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது உயிர்  மத்திய அரசால்  பறிக்கப்பட இருக்கிறது.

perarivalan_267இது மரண தண்டனை அல்ல, மிகக் கவனமாய் திட்டமிடப்பட்டு, நடத்தப்பட இருக்கிற படுகொலை. நம் கண்முன்னே நமது சகோதரர்கள் எவ்வித முகாந்திரமுமின்றி படுகொலை செய்யப்பட 21 வருடங்களாய் காக்க வைக்கப்பட்டு, விடுதலை கிடைக்கும் என நம்பிக்கை கொடுக்கப்பட்டு, இறுதியில்  தூக்குக் கயிறை தழுவப்போகிறார்கள்.

தமிழர்கள் எந்த ஒரு சமயத்திலும் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கக்கூடிய வலிமை உள்ளவர்கள் அல்ல என்று நம்பும் இந்த இந்திய அரசை தமிழர்களாகிய நாம் வெல்லவேண்டும்.

பேரறிவாளன், முருகன், சாந்தன் அவர்களின் விடுதலையை பெற்றுத்தரக் கூடிய வகையில் சட்டரீதியான போராட்டங்களையும், மக்கள் திரள் போராட்டங்களையும் நாம் எடுக்க வேண்டிய சூழலில் இருக்கிறோம். அதற்குப் பெருமளவிலான நிதி தேவைப்படுகிறது. நிச்சயம் இந்த நிதிச்சுமையை இந்த மூவரின் குடும்பத்தினரால் தாங்க முடியாது.

உலகெங்கும் பரந்துவாழும் தமிழ் உறவுகளே! இந்த நிரபராதிகளைக் காக்க நிதியுதவி அளியுங்கள்! 21  ஆண்டுகளாக சிறையில் வாடும் தனது பிள்ளையைக் காக்கக் கோரி நம்மிடம் முறையிடும் அற்புதம் அம்மாளின் துயருக்கு ஒரு முடிவு காண உதவுங்கள்! 21 ஆண்டுகளாக அவர் சிந்திக் கொண்டிருக்கும் கண்ணீருக்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள்! மனமுவந்து நிதி  தாருங்கள்!!

 
நிதியுதவி அளித்தபின்பு அதுகுறித்த விவரங்களை save.3.tamil@gmail.com   மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

நீங்கள் அளிக்கும் நிதி கீழ்க்காணும் பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.

1. மரணதண்டனைக்கு எதிராக சட்டரீதியாக வழக்கு நடத்துதல்

2. மரண தண்டனைக்கு எதிராக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பிரச்சாரம் செய்தல்

3. துண்டறிக்கைகள், சிறுவெளியீடுகள் கொண்டு வருதல்.

4. ஒத்த கருத்துள்ள இயக்கங்களின் பணிகளுக்கு உதவுதல்.

மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின்

கௌரவ தலைவர் - நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர்.

கௌரவ ஆலோசனைக் குழு - பேரா.ஜக்மோகன் சிங், நீதியரசர்கள் அஜித்சிங் பெய்ன்ஸ், எச்.சுரேஷ்

செயற்குழு - பேரா.பால் நியூமன், வழக்கறிஞர்கள் சந்திரசேகர், பா.ப.மோகன், மனித உரிமையாளர் கண.குறிஞ்சி உள்ளிட்டவர்கள்.

- மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம்







--
பூவேந்திரன்

Aug 2, 2011

சானல் 4 காணொளியின் தமிழ்வடிவம் / கைபேசியில் பதிவு செய்ய...


---------- Forwarded message ----------

சானல் 4 வெளியிட்ட காணொளி தமிழர்கள்மீது
சிங்கள அரசு நடத்திய இனப்படுகொலையைச்
சான்றுகளுடன் விளக்கியது. இக்காணொளியின்
தமிழாக்கத்தை தமிழ்த்தாய் இணையதளம்
உருவாக்கி வெளியிட்டுள்ளது. தமிழில்
கேட்கும் பொழுது இலங்கையில் நடந்த நிகழ்வின்
முழுச் செயற்பாடும் நம் கண்முன்னே நிழலாடுகிறது.
இந்தக் காணொளியின் 3ஜிபி வகையை கீழுள்ள
யு டியூப் இணைப்பிலிருந்து வலையிறக்கி உங்கள்
கைபேசியில் இணைத்துக் கேட்கவும்.
நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்

http://www.youtube.com/watch?v=krDcjvGGd78&feature=player_embedded

அன்புடன்
தமிழ்க்கனல்



--
பூவேந்திரன்

Jun 26, 2011

QUOTES for Your WEEK

"What I do today is important, because I am exchanging a day of my life for it." Author Unknown, from A New Day
 
"When you arise in the morning, think of what a precious privilege it is to be alive -to breathe, to think, to enjoy, to love." Marcus Aurelius
 
"Time is the coin of your life. It is the only coin you have, and you can determine how it will be spent. Be careful lest you let other people spend it for you." Carl Sandburg
 
"Every morning you are handed 24 golden hours. They are one of the few things in this world that you get free of charge. If you had all the money in the world, you couldn't buy an extra hour. What will you do with this priceless treasure?" Author Unknown
 
"An inch of time is an inch of gold but you can't buy that inch of time with an inch of gold." Chinese Proverb
 
"But when you look at your life, the majority of your time is spent doing things you have to do or the majority of your time is spent doing what you want to do?" Catherine Pulsifer
 
More quotes:
Quotes about Time  -  http://www.wow4u.com/time/index.html

--
பூவேந்திரன்

Jun 23, 2011

Google Translate welcomes you to the Indic web

Thanks to google.

If you know Tamil, you can learn nearly 60 languages....

 
 

Sent to you by AP via Google Reader:

 
 

via The Official Google Blog by A Googler on 6/21/11

(Cross-posted on the Translate Blog and Research Blog)


 

Beginning today, you can explore the linguistic diversity of the Indian sub-continent with Google Translate, which now supports five new experimental alpha languages: Bengali, Gujarati, Kannada, Tamil and Telugu. In India and Bangladesh alone, more than 500 million people speak these five languages. Since 2009, we've launched a total of 11 alpha languages, bringing the current number of languages supported by Google Translate to 63.

Indic languages differ from English in many ways, presenting several exciting challenges when developing their respective translation systems. Indian languages often use the Subject Object Verb (SOV) ordering to form sentences, unlike English, which uses Subject Verb Object (SVO) ordering. This difference in sentence structure makes it harder to produce fluent translations; the more words that need to be reordered, the more chance there is to make mistakes when moving them. Tamil, Telugu and Kannada are also highly agglutinative, meaning a single word often includes affixes that represent additional meaning, like tense or number. Fortunately, our research to improve Japanese (an SOV language) translation helped us with the word order challenge, while our work translating languages like German, Turkish and Russian provided insight into the agglutination problem.

You can expect translations for these new alpha languages to be less fluent and include many more untranslated words than some of our more mature languages—like Spanish or Chinese—which have much more of the web content that powers our statistical machine translation approach. Despite these challenges, we release alpha languages when we believe that they help people better access the multilingual web. If you notice incorrect or missing translations for any of our languages, please correct us; we enjoy learning from our mistakes and your feedback helps us graduate new languages from alpha status. If you're a translator, you'll also be able to take advantage of our machine translated output when using the Google Translator Toolkit.

Since these languages each have their own unique scripts, we've enabled a transliterated input method for those of you without Indian language keyboards. For example, if you type in the word "nandri," it will generate the Tamil word நன்றி (see what it means). To see all these beautiful scripts in action, you'll need to install fonts* for each language.

We hope that the launch of these new alpha languages will help you better understand the Indic web and encourage the publication of new content in Indic languages, taking us five alpha steps closer to a web without language barriers.

*Download the fonts for each language: Tamil, Telugu, Bengali, Gujarati and Kannada.

Posted by Ashish Venugopal, Research Scientist

 
 

Things you can do from here:

 
 

Jun 21, 2011

Please do right now.-2 mints for Srilanka Tamils

---------- Forwarded message ----------
From: VASUTHEVAN sINNAPPU vasuthev324@yahoo.com
Dear Friends and Rochester Tamils,
 
 
We need justice and peace
                                                                                   Anpudan,
 
 
                                                                                  Sarva. V
 



--
பூவேந்திரன்

Jun 20, 2011

QUOTES for Your WEEK

QUOTES for Your WEEK
"The sun's energy warms the world. But when you focus it through a magnifying glass it can start a fire. Focus is so powerful!"
Alan Pariser
 
"If you stay focused and right on track, you will get to where you want to be."
Michelle C. Ustaszeski
 
"Tennis players focus intensely and specifically on what they're doing at the moment. Their mind isn't drifting off to other things. They know that being focused is essential to success and you can't take your eye off the ball."
Wendy Hearn
 
"Being able to see the end result, rather than just the task, eliminates obstacles, focuses your energy, and provides motivation to excel."
Catherine Pulsifer
 
"An average person with average talents and ambition and average education, can outstrip the most brilliant genius in our society, if that person has clear, focused goals."
Mary Kay Ash
 
More quotes:
Focus Quotes  -  http://www.wow4u.com/focus-quotes/index.html
 

--
பூவேந்திரன்

Jun 19, 2011

Jun 14, 2011

நண்பன்



--
பூவேந்திரன்

QUOTES for Your WEEK

"I think one's feelings waste themselves in words; they ought all to be distilled into actions which bring results."
Florence Nightingale

"Personal action is your pathway to success, even if it is a little bit at a time!"
Catherine Pulsifer

"Dare to dream, but even more importantly, dare to put action behinds your dreams."
Josh Hinds

"You will never plough a field if you only turn it over in your mind."
Irish Proverb

"Thought is the blossom; language the bud; action the fruit behind it."
Ralph Waldo Emerson

Acting on a good idea is better than just having a good idea."
Robert Half

"Start by doing what's necessary; then do what's possible; and suddenly you are doing the impossible."
St. Francis of Assisi

More quotes
http://www.wow4u.com/action/index.html - Action Quotes and Sayings

--
பூவேந்திரன்

Jun 7, 2011

Google Bookmarks update: AP has shared the list "share" with you

Use Google Bookmarks to collect and share information on a topic. Instead of just saving links, add them to a list in Google Bookmarks and let Google help you.

AP has shared the following list in Google Bookmarks with you:

share - https://www.google.com/bookmarks/l?threadID=GF11tNYW23Ws/BDSbmggoQxNie5IYm&inviteID=2479849731

View this list


You've received this message because the Google Bookmarks list share has been shared with you.

May 29, 2011

The Seed


















The Seed



A successful business man was growing old and
knew it was time to choose a successor to take over the business.

Instead of choosing one of his Directors or his children,
he decided to do something different. He called all the young
executives in his company together.


He said, "It is time for me to step down and choose the next CEO.
I have decided to choose one of you. "The young executives were
shocked, but the boss continued. "I am going to give each one
of you a SEED today - one very special SEED. I want you to plant
the seed, water it, and come back here one year from today with
what you have grown from the seed I have given you. I will then
judge the plants that you bring, and the one I choose will be
the next CEO."


One man, named Jim, was there that day and he, like the others,
received a seed. He went home and excitedly, told his wife the
story. She helped him get a pot, soil and compost and he planted
the seed. Everyday, he would water it and watch to see if it had
grown. After about three weeks, some of the other executives began
to talk about their seeds and the plants that were beginning to grow.

Jim kept checking his seed, but nothing ever grew.

Three weeks, four weeks, five weeks went by, still nothing.

By now, others were talking about their plants, but Jim didn't have
a plant and he felt like a failure.


Six months went by -- still nothing in Jim's pot. He just knew he
had killed his seed. Everyone else had trees and tall plants, but
he had nothing. Jim didn't say anything to his colleagues, however.
He just kept watering and fertilizing the soil - He so wanted the
seed to grow.


A year finally went by and all the young executives of the company
brought their plants to the CEO for inspection.


Jim told his wife that he wasn't going to take an empty pot.
But she asked him to be honest about what happened. Jim felt sick
to his stomach, it was going to be the most embarrassing moment
of his life, but he knew his wife was right. He took his empty pot
to the board room. When Jim arrived, he was amazed at the variety
of plants grown by the other executives. They were beautiful --

in all shapes and sizes. Jim put his empty pot on the floor and
many of his colleagues laughed, a few felt sorry for him!


When the CEO arrived, he surveyed the room and greeted his young
executives.


Jim just tried to hide in the back. "My, what great plants, trees,
and flowers you have grown," said the CEO. "Today one of you will
be appointed the next CEO!"


All of a sudden, the CEO spotted Jim at the back of the room with
his empty pot. He ordered the Financial Director to bring him to
the front. Jim was terrified. He thought, "The CEO knows I'm a
failure! Maybe he will have me fired!"

When Jim got to the front, the CEO asked him what had happened
to his seed - Jim told him the story.

The CEO asked everyone to sit down except Jim. He looked at Jim,
and then announced to the young executives, "Behold your next
Chief Executive Officer!

His name is Jim!" Jim couldn't believe it. Jim couldn't even grow
his seed.


"How could he be the new CEO?" the others said.


Then the CEO said, "One year ago today, I gave everyone in this
room a seed. I told you to take the seed, plant it, water it,
and bring it back to me today. But I gave you all boiled seeds;
they were dead - it was not possible for them to grow.


All of you, except Jim, have brought me trees and plants and
flowers. When you found that the seed would not grow, you
substituted another seed for the one I gave you. Jim was the
only one with the courage and honesty to bring me a pot with
my seed in it. Therefore, he is the one who will be the new
Chief Executive Officer!"


* If you plant honesty, you will reap trust

* If you plant goodness, you will reap friends


* If you plant humility, you will reap greatness


* If you plant perseverance, you will reap contentment


* If you plant consideration, you will reap perspective


* If you plant hard work, you will reap success


* If you plant forgiveness, you will reap reconciliation


* If you plant faith, you will reap a harvest


So, be careful what you plant now;

it will determine what you will reap later.



"Whatever You Give To Life, Life Gives You Back"



May 25, 2011

Medicine

மக்கள் ஆரோக்கியமாக வாழ சித்தர்கள் பல வழிமுறைகளை கண்டறிந்து கூறினார்கள்.  அதில் நரை, திரை, மூப்பு, சாக்காடு நீக்கி, என்றும் இளமையுடனும் சுறுசுறுப்புடனும் வாழச் சொல்லப் பட்டவைதான் காய கற்ப மூலிகைகள்.
இந்த  வகையில் நீண்ட ஆரோக்கியத்தை கொடுக்கவல்ல காய கற்ப மூலிகையான ஆடாதோடை பற்றித் தெரிந்து கொள்வோம்.

இது சிறு செடியாகவும், ஒருசில இடங்களில் மரமாகவும் காணப்படும். இதன் இலை மாமர இலை வடிவில் இருக்கும்.  ஆடுகள் தொடாத இலை என்பதால் இது ஆடாதோடா என மருவி பெயர் பெற்றுள்ளது.

ஆடாதோடை அதிகளவு கரியமில வாயுவை உள்வாங்கி, பிராண வாயுவை வெளியிடுகிறது.  இது அதிகளவு ஆக்ஸிஜனை வெளியிடுவதால் இதனை ஆயுள் மூலிகை என்றும் அழைக்கின்றனர்.  இதன் வேர், பட்டை, பூ, இலை அனைத்தும் மருத்துவத் தன்மை கொண்டது.  மனிதனை அன்றாடம் துரத்தும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இது அருமருந்தாகும்.
ஆடாதோடை தென்னிந்தியாவில் பல இடங்களில் காணப்படும் மூலிகையாகும்.  எந்தவகையான மண்ணாக இருந்தாலும் இந்த ஆடாதோடை செழித்து வளரும் தன்மை கொண்டது.  கிராமப்புற மக்களும் சரி, அங்கு மருத்துவம் செய்யும் மருத்துவர்களும் சரி, ஆடாதோடை இலையை அதிகம் பயன்படுத்துவார்கள்.  நெஞ்சில் சளி, அதனுடன் வலி, உடலில் தசைப்பகுதிகளில் வலி போன்றவற்றிற்கு ஆடாதோடை இலையைப் பறித்து காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து கொடுப்பார்கள்.  இது சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது.  அதுபோல் தடுக்கி விழுந்து மார்புப்பகுதியில் அடிபட்டால் உடனே முதலுதவியாக ஆடாதோடை இலை ஒன்றுடன் வெற்றிலை 2 சேர்த்து மென்று தின்னக் கொடுப்பார்கள்.  இது உடனடி நிவாரணமாகும்.

மனித உடலில் நுரையீரல் முக்கிய உறுப்பாகும்.  இது சுவாசக் காற்றை உள்வாங்கி  அதிலுள்ள பிராணவாயுவைப் பிரித்து எடுத்துக் கொண்டு கரியமில வாயுவை வெளியேற்றுகிறது.  நுரையீரல் நன்கு செயல் பட்டால்தான் இரத்தம் சுத்தமடையும்.  இதனால் நீண்ட ஆயுளும் கிடைக்கும்.  இத்தகைய சிறப்பு வாய்ந்த நுரையீரலைப் பலப்படுத்த ஆடாதோடை சிறந்த மருந்தாக உள்ளது.  இது நுரையீரல் காற்றுச் சிற்றறைகளில் உள்ள அசடுகளை (சளி) நீக்கி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.  இதனால் இதை மரணமாற்று மூலிகை என்றும் கூறுகின்றனர்.
ஆடாதோடை இலை, தூதுவளை இலை (2010 மார்ச் இதழில் இதுபற்றி விரிவாகக் கூறியுள்ளோம்) சம அளவு எடுத்து காயவைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் காலை, மாலை வேளைகளில் தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் அனைத்தும் நீங்கும்.  சளித் தொல்லை அணுகாது.  நுரையீரல் பலம்பெறும்.  மேலும் இரத்த நாளங்களில் உள்ள சளியை நீக்கி ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.  ரத்தத்தில் உள்ள தேவையற்ற உப்பு, கொழுப்பு போன்றவற்றை மாற்றும் தன்மை ஆடா தோடைக்கு உண்டு.

ஆடாதோடை இலையை நிழலில் உலர்த்திப் பொடித்து வைத்து தினமும் காலை வேளையில் 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து, குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு உண்டாகும் சளி, இருமல், இரைப்பு நீங்கும்.  நெஞ்சுச் சளியைப் போக்கி உடலை சீரான நிலையில் வைத்துக்கொள்ளும். இதில் பச்சயம் அதிகமாக இருப்பதால் நெஞ்சுச்சளி, இருமல் போன்றவற்றை உடனே மாற்றும். குத்து இருமல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும்.
மேற்கண்ட முறைப்படி 1 மண்டலம் அதாவது 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குழந்தைகளுக்கு எப்போதுமே சளித் தொல்லை உண்டாகாது.

ஆடாதோடை வேரையும், கண்டங்கத்திரி வேரையும் இடித்து நீர்விட்டு கொதிக்க வைத்து குடிநீராக மாற்றி அதனுடன் திப்பிலி பொடி சேர்த்து அருந்தி வந்தால் வறட்டு இருமல் மற்றும்  தொண்டைப் புகைச்சல் குணமாகும்.
ஆடாதோடை இலை, தூதுவளை,  துளசி இலை இவைகளை வெயிலில் உலர்த்திப் பொடியாக்கி வைத்துக்கொண்டு 1 ஸ்பூன் பொடியில் தேன் கலந்து தினமும் காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு, தும்மல், இருமல், சுவாச காச நோய்கள் நீங்கும்.  ஆடாதோடை இலையைக் குடிநீர் செய்தோ, அல்லது பொடி செய்து தேன் கலந்தோ சாப்பிட்டு வந்தால் நல்ல குரல் வளம்கிடைக்கும்.  ஆடாதோடை இலைகளை உலர்த்திப் பொடியாக்கி சிறிது நீர்விட்டு குழைத்து நெஞ்சில் பற்றுப் போட்டால், நெஞ்சுச்சளி அறவே நீங்கும்.
ஆடாதோடை இலை     - 2,  வெற்றிலை - 2,  மிளகு - 5, சுக்கு - 1 துண்டு சேர்த்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல்வலி, நெஞ்சுச் சளி நீங்கும்.

இண்டு, இசங்கு, தூதுவளை, கண்டங்கத்திரி , ஆடாதோடை, நறுக்குமூலம் இவற்றின் இலைகளைச் சம அளவு எடுத்து காயவைத்து பொடியாக்கி வைத்துக் கொண்டு தினமும் இருவேளை, கஷாயம் செய்து அருந்தி வந்தால், ஈளை, இழுப்பு, இருமல், சுவாசகாசம், போன்றவை குணமாகும்.

காயவைத்த ஆடாதோடையிலை - 5, அதிமதுரம்-2 கிராம்,  திப்பிலி-1 கிராம், தாளிச பத்திரி - 1 கிராம், சிற்றரத்தை 1/4 கிராம் எடுத்து  இடித்து பொடியாக்கி அதனை 500 மி.லி. நீர்விட்டு கொதிக்க வைத்து அது 200 மி.லி.யாக வரும்போது இறக்கி வடிகட்டி காலை மாலை என இருவேளையும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் சளி நீங்கும்.  கோழை வெளியேறும்.  இரைப்பு நீங்கும்.

கழுத்து வலி, கை, கால் மூட்டு வலி, தோள்பட்டை வலி இவைகளுக்கு ஆடாதோடை காய்ந்த இலையுடன்  வசம்பு, மஞ்சள், சுக்கு இவைகளை சம அளவு எடுத்து இடித்து அதனுடன் தவிடு சேர்த்து துணியில் கிளி பொட்டலமாகக்  கட்டி சட்டியில் வைத்து சூடாக்கி வலி உள்ள இடங்களில் ஒற்றடம் கொடுத்தால் வலிகள் நீங்கும்.

ஆடாதோடை இலை, வேர்ப்பட்டை, கண்டங் கத்திரி, இண்டு இவற்றை காயவைத்து இடித்து பொடியாக்கி கஷாயம் செய்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வந்தால் மண்டைக்குத்து, தொண்டைவலி, வறட்டு இருமல் போன்றவை நீங்கும்.  இந்த பொடியை தேனில் கலந்துகூட அருந்தலாம்.
தகவல்:mohammad Sultan

--
Success brings hundred fathers and failure makes you an orphan-President John F. Kennedy of USA

May 24, 2011

The Emperor and the Horseman. (வந்த மெயில்)

The Emperor and the Horseman.
வந்த மெயில்
 
A long time ago, there was an Emperor who told his horseman that  if he could ride on his horse and cover as much land area as he likes, then the Emperor would give him the area of land he has covered.

Sure enough, the horseman quickly jumped onto his horse and rode  as fast as possible to cover as much land area as he could. He kept on riding and riding, whipping the horse to go as fast as possible.
When he was hungry or tired, he did not stop because he wanted to cover as much area as possible.

Came to a point when he had covered a substantial area and he was exhausted and was dying.
Then he asked himself, "Why did I push myself so hard to cover so much land area?
 Now I am dying and I only need a very small area to bury myself."

The above story is similar with the journey of our Life.
We push very hard everyday to make more money, to gain power and recognition.
We neglect our health , time with our family and to appreciate the surrounding beauty and the hobbies we love.

One day when we look back , we will realize that we don't really need that much,
but then we cannot turn back time for what we have missed.

--
Success brings hundred fathers and failure makes you an orphan-President John F. Kennedy of USA

May 13, 2011

வாக்களித்த உங்களுக்கு நன்றி

அடுத்தவர் தோழ்வியில்
மகிழ்வது நல்லதல்ல ... தெரிந்தும்
மகிழ்ச்சியாக இருக்கிறது...

வயிறு எறிந்த விஷயங்கள்
ஒன்றா இரண்டா
அங்கே உயிர் போகும் சமயங்களில்
கடிதம் போட்டார்
தந்தி அடித்தார்
பதவிக்காக மட்டும்
பதறி அடித்து டெல்லி போனார்

அம்மையார்களின் நகை அணிந்த
புகைப்படத்தை காட்டியே
ஊழல் ஊழல் என சொல்லி வந்தவர்கள்

கோடிகளில் புரண்டனர்
மிச்சம் மீதியை
நாகரிக பிச்சையாய்
தொலைக்காட்சி, மிக்சி, கிரைண்டர் என ...

மறக்காத,
இலவச பிச்சையை
மறுத்த உங்களுக்கு, மக்களுக்கு நன்றி

சீமான் சொன்னதுபோல
காங்கிரசை வீழ செய்ததுக்கு நன்றி

கூஜா தூக்காமல்
நமக்கு தெரியா ஆயிரம் அச்சுறுத்தல்களுக்கு
இடையேயும்,
தங்கள் பணியை செவ்வனே செய்த
அதிகாரிகளுக்கு மனமார்ந்த நன்றி!! நன்றி!!

இந்த மகிழ்ச்சி
தமிழனுக்கு படகாயிருந்து
நடுக்கடலில் தவிக்கவிட்டவர்களும்
அதற்கு துணை போனவர்களும்
காணமல் போனதற்கு

வென்று வந்தவர்கள்
குறைந்தபச்சம் "ஏன்டா இவர்களுக்கு வாக்களித்தோம்?"
என என்னாதவாறு நடக்க வேண்டும்

பூவேந்திரன்

Apr 10, 2011

Traffic Police

மாசம் மாசம் வயித்தக் கட்டி வாயக்கட்டி மிச்சம் பிடிச்சு ஏதாவது ஆச்சுன்னா பின்னாடி உதவும்னு இன்சூரன்ஷ் கட்டின ஆட்கள், பணத்தை வாங்குறப்ப குரங்கு பங்கிட்ட அப்பம் போல பேருக்கு கொஞ்சம் வாங்குறப்ப, இதுக்கா இந்த நட நடந்தோம்னு பெரு மூச்சு விடறத பேப்பர்லயும், தெரிஞசவங்க சொல்ல கேட்டு இருக்க்கோம்...

இங்க பாருங்க ... வயிறு எரியுதுங்க...

நண்பர் புதுசா வாங்கின காரை (அவருக்கு புதுசு, கார் பழசு) ரஜினி பாட்டை கேட்டுக்கிட்டே ஸ்டைலா ஓட்டிக்கிட்டு வரும்போது இடது பக்கத்துல இருந்து வந்தவன் நேர மோதிட்டான்... நல்ல வேலை... ஆட்களுக்கு அடிபடலை... ஆனா காருக்கு நல்ல அடி.

நண்பர் என்ன ஆச்சு, எப்படி ஆச்சு, என்ன செய்ரதுன்னு யோசிக்கும்போதே, 'Subway'-ல சாப்பிட்டுக்கிட்டு இருந்த போலீஸ் உடனே வந்துட்டாங்க...போலீஸ பார்த்த நல்லதம்பி விவேக் மாதிரி எஸ்கேப் ஆகிட்டான்.

நண்பருக்கோ கை, கால் எல்லாம் நடுங்குதா இல்ல ஆடுதான்னு தெரியாத அளவுக்கு நடுக்கம். எனக்கோ எப்பவுமே போலீஸ்னா பயம், அலர்ஜி. என்ன நடக்கும்னு சொல்ல முடியாதே!

இதுதாங்க அடிபட்ட் கார்...








Police : 'Hi Dude!'

Friend : 'Sorry'

Police : No.. No... Its ok! No need to say sorry. Mistake is not yours...
- அப்ப்டின்னு சொல்லிகிட்டே போக்குவரத்த ஒழுங்குபடுத்திக்கிடே, என்னவோ எழுதினார்...மோதினவர்ட்ட Driving License, Insurance Papers வாங்கிபாத்துட்டு, அவர் கார் பாதிப்பு இல்லாததால எங்கல பார்த்து, "இந்தாங்க இதுதான் என் விசிடிங் கார்ட்...நீங்க இரண்டு நாள் கழித்து இன்சூரன்ஸ் கம்பெனிக்கு பேசுங்க... வேர எதாவது சொல்லனுமா?"

நாம என்ன சொல்லப்போரோம்... சரின்னு வந்த்ட்டோம்.

வெள்ளி விபத்து. திங்கள் அவருக்கு அந்த போலீஸ்காரர்ட்ட இருந்து ஒரு மின்னஞல் கேஸ் நம்ப்ர், விபத்து விளக்கத்துடன்.

செவ்வாய் இன்சூரண்ஸிடம் இருந்த்து போன்... "உங்களுக்கு, காரை இழுத்துச் சென்ற கம்பெனியில் இருந்த்து பில் வரும். கட்ட வேண்டாம்... அதை நாங்கள் கட்டிக் கொள்வோம். காரை சோதித்ததில், காரின் தற்போதய மதிப்பு 8000 டாலர்கள். உங்களுக்கு நேரம் இருக்கும்போது வந்து வாங்கிக் கொள்ளுங்கள் அல்லது நாங்கள் தபாலில் அனுப்பிவிடுகிறோம்"

நன்பருக்கு ஒன்றும் புரியவில்லை... ஏன்னா... அவர் வாங்கினதே 4000-க்குதான். எதுக்கு வம்புன்னு, தபால்லயே அனுப்ப சொல்லிட்டார். ஆச்சர்யம் என்னன்ன... இரண்டாம் நாளே செக் வந்துருச்சு.

இதுல என்ன விசயம்னா...
- யாரும் எதுவும் கேக்கல...
- லஞசம் எதுவும் கேக்கல...
- நீ பன்னதுதான் தப்புன்ன சாட்சிய மாத்தல...
- எவ்வளவுக்கு நீ வாங்குன அப்படின்னு கேக்கல...

இப்படி சுமூகமா போகவேண்டிய வேல ஏங்க நம்ம ஊர்ல இடியாப்ப சிக்கலா இருக்கு?

கீழே பாருங்க ஒரு போலீஸ்காரர் வேலை பார்க்குரத....




பொறுமையா இருக்குரதுதான் போலீஸ் - அப்படின்னு நினச்சுடாம இதயும் பாருங்க!