Pages

Oct 11, 2019

Birds sounds

கீழேயுள்ள இணைப்பை நீங்கள் திறந்தால், நிறைய பறவைகள் தோன்றும், நீங்கள் எந்த பறவையையும் தொடும்போது, நீங்கள் பறவையின் பெயரைக் காண்பீர்கள், அதன் குரலைக் கேட்பீர்கள் - முயற்சி செய்யுங்கள் இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. https://coneixelriu.museudelter.cat/ocells.php


Poov

Jul 26, 2019

படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது:

அரக்க பரக்க படிக்காமல் நிறுத்தி நிதானமாய் படிக்கவும்.

குண்டக்க மண்டக்க. குண்டக்க-இடுப்புப்பகுதி.மண்டக்க-தலைப்பகுதி.
சிறுவர்கள் கால்பக்கம்,தலைப்பக்கம்
பார்க்காமல் தூங்குவார்கள்.
அதுபோல் வீட்டில் பொருள்கள் சிதறி,
மாறி இருத்தலே
குண்டக்க மண்டக்க என்பதற்கு பொருள்.
அந்தி சந்தி.
அந்தி_மாலைக்கும்
இரவுக்கும் இடையில்உள்ள பொழுது.
சந்தி_இரவுக்கும் காலைக்கும்
இடையில் உள்ள விடியல் பொழுது.

அக்குவேர் ஆணிவேர்

அக்குவேர்_செடியின் கீழ் உள்ள
மெல்லியவேர்.
ஆணிவேர்_செடியின் கீழ் ஆழமாக
செல்லும் உறுதியான வேர்.

அரை குறை

அரை-ஒரு பொருளில் சரிபாதி அளவு.
குறை-அந்த சரிபாதியளவில்
குறைவாக உள்ளது குறை.
(உ-ம்.)அரை குறை வேலை.

அக்கம்பக்கம்.

அக்கம்-தன்வீடும்,தான்இருக்கும் இடமும்.
பக்கம்-பக்கத்துவீடும் பக்கத்தில் உள்ள இடமும்.
கார சாரம்

காரம்-உறைப்புச்சுவை.
சாரம்-சார்ந்தது.(காரம்
சார்ந்த பிற சுவைகள்)

இசகுபிசகு.

இசகு-தம் இயல்பு
தெரிந்து,ஏமாற்றுபவனிடம்
ஏமாறுதல்.
பிசகு-தம்முடைய
அறியாமையால் ஏமாறுதல்.
(உ-ம் )இசகு பிசகாக மாட்டிக்கொண்டார்.

இடக்கு முடக்கு

இடக்கு--எள்ளி நகைத்தும்,
இகழ்ந்தும் பேசுதல்.
முடக்கு--கடுமையாக எதிர்த்தும்,
தடுத்தும் பேசுதல்.

ஆட்ட பாட்டம்

ஆட்டம்--தாளத்திற்குப் பொருந்தியோ/பொருந்தாமலோ ஆடுவது.
பாட்டம்--ஆட்டத்திற்குப்
பொருந்தியோ/பொருந்தாமலோ
பாடுவது.

அலுப்பு சலிப்பு

அலுப்பு-உடலில் உண்டாகும் வலியும்
குடைச்சலும்.
சலிப்பு-உள்ளத்தில் ஏற்படும்
வெறுப்பும் சோர்வும்.

1.தோட்டம் துரவு.
2.தோப்பு துரவு.
தோட்டம் -செடி,கொடி கீரை பயிரிடப்படும் இடம்.தோப்பு-மரங்களின் தொகுப்பு.
துரவு--கிணறு

காடு கரை.

காடு-மேட்டுநிலம்
(முல்லை).

கரை-வயல் நிலம்(மருதம்-
நன்செய்,புன்செய்)

காவும் கழனியும்.

கா--சோலை.
கழனி--வயல்.
(மருதம் சார்ந்த நிலப்பகுதி)

நத்தம் புறம்போக்கு.

நத்தம்--ஊருக்குப் பொதுவாகிய
மந்தை.(ஊருக்குப் பக்கத்தில் இருக்கும்)
புறம்போக்கு--ஆடு மாடு மேய்வதற்காக அரசு
ஒதுக்கிய புல்நிலம்.(ஊர் கடந்து தூரத்தில் இருக்கும்.)

பழக்க வழக்கம்.

பழக்கம்--ஒருவர் ஒரு
செயலைப் பலகாலம்
செய்து வருவது.
வழக்கம்--பலர் ஒரு செயலைப்
பலகாலம் கடைபிடித்து வருவது.(மரபு)

சத்திரம் சாவடி.

சத்திரம்--இலவசமாக சோறு போடும் இடம்(விடுதி).
சாவடி--இலவசமாக தங்கும் இடம்(விடுதி).

நொண்டி நொடம்.

நொண்டி--காலில் அடிப்பட்டோ அல்லது அடிபடாமலோ ,ஒரு குறையால் நொண்டி நடப்பவர்.
நொடம்--கை முடங்கி,அதனால் கையின் செயல் அற்றவர்(நுடம்,முடம்)

பற்று பாசம்.

பற்று--நெருக்கமாக உறவாடி இருத்தல்.
பாசம்--பிரிவில்லாமல்
சேர்ந்தே இருத்தல்.

ஏட்டிக்குப் போட்டி.

ஏட்டி-விரும்பும் பொருள் அல்லது செயல்.
(ஏடம்--விருப்பம்.)
போட்டி--விரும்பும் பொருள் அல்லது
செயலுக்கு எதிராக வரும் ஒன்று.

கிண்டலும் கேலியும்.

கிண்டல்--ஒருவன் மறைத்தச் செய்தியை அவன் வாயில் இருந்தே
பிடுங்குதல்.(கிண்டி தெரிந்து கொள்ளுதல்).
கேலி--எள்ளி நகையாடுதல்.

ஒட்டு உறவு.

ஒட்டு--இரத்தச்சம்பந்தம் உடையவர்கள்.(தாய்,தந்தை,
உடன்பிறந்தவர்கள்,மக்கள்)
உறவு--பெண் கொடுத்த அல்லது
பெண் எடுத்த வகையில் நெருக்கமானவர்கள்.

பட்டி தொட்டி.
பட்டி---மிகுதியாக
ஆடுகள் வளர்க்கப்படும் இடம்(ஊர்).
தொட்டி---மாடுகள் மிகுதியாக வளர்க்கப்படும் இடம்(ஊர்).

கடை கண்ணி.

கடை---தனித்தனியாக அமைந்த வியாபார(வணிக)நிலையம்.
கண்ணி-----தொடர்ச்சியாக கடைகள் அமைந்த
கடைவீதி.
பேரும் புகழும்.
பேர்--வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் உண்டாகும் சிறப்பும் பெருமையும்.
புகழ்--வாழ்விற்குப் பிறகும்
நிலைப்பெற்றிருக்கும் பெருமை.

நேரம் காலம்.

நேரம்--ஒரு செயலைச்
செய்வதற்கு நமக்கு வசதியாக
(Time) அமைந்த பொழுது.
காலம்--ஒரு செயலைச்
செய்வதற்கு பஞ்சாங்க அடிப்படையில்
எடுத்துக்கொள்ளும் கால அளவு நிலை.

பழி பாவம்.

பழி---நமக்கு தேவையில்லாத,
பொருந்தாத செயலைச்
செய்ததால்,இப்பிறப்பில்
உண்டாகும் பழிப்பு.
பாவம்---தீயசெயல்களைச்
செய்ததால் மறுபிறப்பில்
நாம் அனுபவிக்கும் தீய நிகழ்வுகள்.

கூச்சலும் குழப்பமும் .

கூச்சல்--துன்பத்தில் சிக்கி உள்ளோர் போடும்
அவல ஒலி (ஓலம்).
கூ--கூவுதல்.
----
குழப்பம் --அவல ஒலியைக் கேட்டு அங்கு வந்தவர்கள் போடும் இரைச்சல்..

நகை நட்டு.

நகை--பெரிய அணிகலங்களைக்
குறிக்கும்.(அட்டியல்,ஒட்டியாணம்,சங்கிலி).
நட்டு---சிறிய அணிகலன்களைக்குறிக்கும்.
(திருகு உள்ள தோடு,காப்பு,கொப்பு).

பிள்ளை குட்டி.

பிள்ளை--(பொதுப்பெயர்)
இருப்பினும் ஆண் குழந்தையைக் குறிக்கும்.
குட்டி---இது பெண் குழந்தையைக்
குறிக்கும்.

பங்கு பாகம்
பங்கு--கையிருப்பு பணம்,நகை,பாத்திரங்களைப்பிரித்தல்.(அசையும் சொத்து)
பாகம்--வீடு,மனை,நிலபுலன்களைப் பிரித்தல்,(அசையா சொத்து)

வாட்ட சாட்டம்.

வாட்டம்-வளமான தோற்றம்,வாளிப்பான உடல் ,
அதற்கேற்ப உயரம்.
சாட்டம்--உடல்(சட்டகம்),வளமுள்ள கனம்.
தோற்றப் பொலிவு.
காய்கறி.

காய்---காய்களின் வகைகள்.
கறி--
(சைவ உணவில் )கறிக்கு உபயோகப்
படுத்தப்படும் கிழங்கு வகைகளும்,கீரை வகைகளும்.

கால்வாய்-வாய்க்கால்

வாய்--குளம்.
கால்வாய்--குளத்திற்கு
தண்ணீர் வரும் கால்.(பாதை).
வாய்க்கால்--குளத்திலிருந்து
தண்ணீர் செல்லும் கால்.(பாதை)
பாதை என்பது நீர்வழிப்பாதையைக்குறிக்கும்.

ஈவு இரக்கம்.
ஈவு--(ஈதல்).கொடை வழங்குதல்.
இரக்கம்---(அருள்).
பிற உயிர்களின்மேல்
அருள் புரிதல்.
பொய்யும் புரட்டும்.

பொய்---உண்மை இல்லாததைக்கூறுவது.
புரட்டு-- ஒன்றை நேருக்கு மாறாக
மாற்றி ,உண்மைபோல் நம்பும்படியாக கூறுவது.

சூடு சொரணை.

சூடு--ஒருவர் தகாத சொல்லைப்
பேசும்போது/தகாத செயலைச்செய்யும் போது நமக்கு ஏற்படும்
மனக்கொதிப்பு(மனவெதுப்பு,எரிச்சல்).
சொரணை--நமக்கு ஏற்படும் மான உணர்வு.
பட்டம், விருது.
பட்டம்-- கல்லூரி , பல்கலைக்கழகம் இவற்றல் படித்து பெறுவது.
பெயருக்கு ப்பின்னால்‌ இடம் பெறும்.
விருது--தகுதி அடிப்படையில் வழங்கப்படுவது.இது
பெயருக்கு முன்னால் இடம்பெறும்.
------------ -------------.


Poov

Feb 18, 2019

"வே' என்ற ஒற்றைத் தமிழெழுத்து

"வே' என்ற ஒற்றைத் தமிழெழுத்து அல்லது தமிழ்ச் சொல்லிற்கு 'மறை' (மறைத்து வைத்தல்) என்பது பொருளாகும். 

தாவரங்களின் வேரானது, மண்ணுக்குள் ஓடி மறைந்து கிடப்பதாலேயே அது 'வே'ர் எனப்பட்டது.

மறைந்திருந்து தாக்குவதாலேயே அவன் 'வே'டன் எனப்பட்டான். வேட்டையும் அப்படித்தான். 
இது 'வே'ங்கைக்கும் பொருந்தும்..

சுற்றிலுமிட்டு மறைத்துப் பாதுகாப்பதாலேயே 'வே'லி எனப்பட்டது. வேய்தலும் அப்படித்தான்.
அப்படி அரண் என்ற வேலிக்குள் வாழ்ந்ததாலேயே அவன் 'வே'ந்தன் எனப்பட்டான்..

சுடுநீரில் மூலிகைகளையிட்டு, அடர்த்துணி கொண்டு நம்மை மூடிமறைத்து, அதனை முகர்ந்து நோய்போக்கும் நிகழ்வு 'வே'து பிடித்தல் எனப்பட்டது.

'வே'ய்ங்குழல் எனச் சங்க இலக்கியங்கள் முதல் போற்றும் பெண்ணில் அடர்க்கூந்தல், அப்படியே அவளது முழுவுடலையும் கவிழ்ந்து மறைக்கக் கூடியதாகையால் அவ்வாறு கூறப்பட்டது.

நம்முடலின் பாகங்களையும், மானத்தையும் மறைத்துக் காப்பாற்றுவதாலேயே அவ்வுடை 'வே'ட்டி எனப்பட்டது. 

வேதத்தைக் கூட " மறை" என்றுதான் தனித் தமிழில் கூறுகிறோம்.

கண்ணிமைக்கும் நேரத்தில் செல்வதால் அது 'வே'ல் எனப்பட்டது..
அதை வேய்ந்தவனே 'வே'லன் எனப்பட்டான்.

கண்ணுக்கு தெரியாத அளவுக்கு மறைவாக விரைவாக செல்வதால் வே'கம் எனப்படுகிறது.

மறைந்திருந்து ஒற்று வேலை பார்த்ததாலேயே அது 'வே'வு எனப்பட்டது.

உண்மைத்தன்மை தெரியாமல் இருப்பதாலேயே அது வே'டம்

கசப்பு வெளியே தெரியாமல் உள்ளே மறைவாக இருப்பின் அது வே'ம்பு

இலையா இல்லை பூச்சியா...

மாரடைப்பு

#மாரடைப்பு

சமீபத்தில் பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம் அவர்கள் சொன்ன தகவல் இது.

*மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு*

S, T, R என்ற இந்த மூன்றெழுத்துக்களை மறக்கக் கூடாது.

S = SMILE
T = TALK
R = RAISE BOTH ARMS

ஒரு திருமண நிகழ்விலோ, பொது இடங்களிலோ அல்லது வீட்டில் இருக்கும் போதோ, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தடுமாறுவதை, அல்லது கீழே விழுவதைக் கண்டால், உடனே நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும்.
ஆனால், அவர் நம்மிடம் தனக்கு *ஒன்றும் இல்லை, நான் நன்றாகத்தான் இருக்கிறேன்* என்றெல்லாம் சொல்லுவார். நாமும், ஏதாவது பித்த மயக்கமாக இருக்கும் என்று லேசாக விட்டு விடுவோம் *ஆனால் உண்மையில் அது ஒரு மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்!!*

மாரடைப்பை முன்கூட்டியே உணரக் கூடிய ஒரு உறுப்பு நமது தலைமைச் செயலகமான மூளையாகும். மூளை அறிவிக்கும் முன்னெச்சரிக்கையே அந்த தடுமாற்றமாக இருக்கலாம். அதனை S T R அதாவது,

*SMILE (சிரிக்க சொல்வது),*
*TALK (பேச சொல்வது),*
*RAISE BOTH ARMS (இரண்டு கைகளையும் மேலே தூக்க சொல்வது)*

இது போன்ற செயல்களை செய்யச் சொல்வது மூலம், அவர்களுக்கு ஏற்படப் போகும், மாரடைப்பை (ஹார்ட் அட்டாக்) முன்கூட்டியே கண்டு பிடித்து விடலாம். அதாவது, *இம்மூன்றையும் அவர் சரியாகச் செய்ய வேண்டும்!* இல்லையேல் பிரச்சனை பெரிதுதான்!

உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதால், உயிரிழப்பை தடுக்கலாம்.
மருத்துவர்கள் கூறும் எச்சரிக்கை என்ன வென்றால், *இந்த சோதனை செய்த, 3 மணி நேரத்திற்குள் மருத்துவ மனைக்கு வந்து விட்டால் போதும், எளிதாக உயிர் இழப்பை தடுத்து விடலாம்*, என்று உறுதியாக கூறுகிறார்கள்.

இவை மூன்றும், அவர் நல்லபடியாக சரியாக செய்து விட்டார் என்றால், மேலும் உறுதிபடுத்த *ஒரு முக்கியமான செயலை செய்ய வேண்டும்* என்று சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுகிறது.

அதாவது, *அவருடை நாக்கை நீட்ட சொல்ல வேண்டும்,*

அவர் தனது நாக்கை நேராக நீட்டிவிட்டார் என்றால், அவர் நார்மலாக, நலமாக உள்ளார் என்று தீர்மானிக்கலாம் அவ்வாறு நேராக நீட்டாமல் *ஒரு பக்கமாக அதாவது வலது அல்லது இடது பக்கமாக வளைத்து நீட்டினால்*, அடுத்த 3 மணி நேரத்திற்குள் எப்பொழுது வேண்டுமானாலும், அவருக்கு அட்டாக் வரலாம்.

இதனை படிக்கும், அன்பர்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும், உறவினர் களிடமும், நண்பர்களிடமும், ஜாதி, மத பேதமின்றி, மனிதாபிமான அடிப்படையில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துமாறு, கேட்டுக்கொள்கிறேன்.

மருத்துவர்களின் புள்ளி விவரப்படி, இதனை அனைவரிடமும் எடுத்து சொல்வதன் மூலம் *10 சதவீத மரணத்தை தவிர்க்கலாம்* என்றும் சொல்கிறார்!!



Poov

Feb 15, 2019

That is life

Michael Jackson wanted to live for 150 years.
He appointed 12 doctors at home who would daily examine him from hair to toenails.
His food was always tested in laboratory before serving.
Another 15 people were appointed to look after his daily exercise and workout.
His bed had the technology to regulate the oxygen level.
Organ donors were kept ready so that whenever needed they could immediately donate their organ . The maintenance of these donors were taken care of by him.
He was proceeding with a dream of living for 150 years.
Alas! He failed.
On 25th June 2009, at the age of 50, his heart stopped functioning. The constant effort of those 12 doctors didn't work.
Even, the combined efforts of doctors from Los Angeles and California too couldn't save him.
The person who would never put a step forward without the doctor's suggestion for his last 25 years, couldn't fulfill his dream of living 150 years.
Jackson's final journey was watched live by 2.5 million people which is the longest live telecast till date.
On the day he died, i.e. 25th June '09 at 3.15 pm, Wikipedia, Twitter, AOL's instant messenger stopped working. About 8 lakh people together searched Michael Jackson on Google.
Jackson tried to challenge death but death challenged him back.
The materialistic life in this materialistic world embraces materialistic death instead of a normal one. This is the rule of life.
Now let's think.
Are we earning for the builders, engineers, designers or decorators?
Whom do we want to impress by showing expensive house, car and extravagant wedding?
Do you remember the food items in the wedding reception which you had attended couple of days ago?
Why are we working like an animal in life?
For the comfort of how many generations do we want to save?
Most of us have one or two children. Have you ever thought how much do we need and how much do we want?
Do we consider that our children won't be able to earn much and so it's necessary to save some extra for them?
Do you spend some time with yourself, family or friends in the week?
Do you spend 5% of your earning on yourself?
Why don't we find happiness in life along with what we earn?
If you think deeply, your heart might fail to work. You will suffer from slip disc, high cholesterol, insomnia etc. etc.
Conclusion: Spend some time for yourself. We don't own any property, it's only in some documents that our name is written temporarily.
When we say "this is my property", God passes a crooked smile.
Don't create an impression on a person seeing his car or dress. Our great mathematicians and scientists used bicycle or scooter for commuting.
It's not a sin to be rich, but to be rich only with money is a sin.
Control life or else life will control you.
The things which really matter at the end of life is contentment, satisfaction and peace.
Sadly, these cannot be bought.
Posted by Nirvana Naturals


Poov

If you cross 40 be careful on exercise


If you cross 40 be careful while doing excercise