| No | வருக்கம் | Aathichoodi |
| 1 | உயிர் வருக்கம் | 1 அறம் செய விரும்பு. |
| 2 | உயிர் வருக்கம் | 2 ஆறுவது சினம். |
| 3 | உயிர் வருக்கம் | 3 இயல்வது கரவேல். |
| 4 | உயிர் வருக்கம் | 4 ஈவது விலக்கேல். |
| 5 | உயிர் வருக்கம் | 5 உடையது விளம்பேல். |
| 6 | உயிர் வருக்கம் | 6 ஊக்கமது கைவிடேல். |
| 7 | உயிர் வருக்கம் | 7 எண் எழுத்து இகழேல். |
| 8 | உயிர் வருக்கம் | 8 ஏற்பது இகழ்ச்சி. |
| 9 | உயிர் வருக்கம் | 9 ஐயம் இட்டு உண். |
| 10 | உயிர் வருக்கம் | 10 ஒப்புரவு ஒழுகு. |
| 11 | உயிர் வருக்கம் | 11 ஓதுவது ஒழியேல். |
| 12 | உயிர் வருக்கம் | 12 ஔவியம் பேசேல். |
| 13 | உயிர் வருக்கம் | 13 அஃகஞ் சுருக்கேல். |
| 14 | உயிர்மெய் வருக்கம் | 14 கண்டொன்று சொல்லேல். |
| 15 | உயிர்மெய் வருக்கம் | 15 ஙப் போல் வளை. |
| 16 | உயிர்மெய் வருக்கம் | 16 சனி நீராடு. |
| 17 | உயிர்மெய் வருக்கம் | 17 ஞயம்பட உரை. |
| 18 | உயிர்மெய் வருக்கம் | 18 இடம்பட வீடு எடேல். |
| 19 | உயிர்மெய் வருக்கம் | 19 இணக்கம் அறிந்து இணங்கு. |
| 20 | உயிர்மெய் வருக்கம் | 20 தந்தை தாய்ப் பேண். |
| 21 | உயிர்மெய் வருக்கம் | 21 நன்றி மறவேல். |
| 22 | உயிர்மெய் வருக்கம் | 22 பருவத்தே பயிர் செய். |
| 23 | உயிர்மெய் வருக்கம் | 23 மண் பறித்து உண்ணேல். |
| 24 | உயிர்மெய் வருக்கம் | 24 இயல்பு அலாதன செய்யேல். |
| 25 | உயிர்மெய் வருக்கம் | 25 அரவம் ஆட்டேல். |
| 26 | உயிர்மெய் வருக்கம் | 26 இலவம் பஞ்சில் துயில். |
| 27 | உயிர்மெய் வருக்கம் | 27 வஞ்சகம் பேசேல். |
| 28 | உயிர்மெய் வருக்கம் | 28 அழகு அலாதன செய்யேல். |
| 29 | உயிர்மெய் வருக்கம் | 29 இளமையில் கல். |
| 30 | உயிர்மெய் வருக்கம் | 30 அறனை மறவேல். |
| 31 | உயிர்மெய் வருக்கம் | 31 அனந்தல் ஆடேல். |
| 32 | ககர வருக்கம் | 32 கடிவது மற. |
| 33 | ககர வருக்கம் | 33 காப்பது விரதம். |
| 34 | ககர வருக்கம் | 34 கிழமைப்பட வாழ். |
| 35 | ககர வருக்கம் | 35 கீழ்மை அகற்று. |
| 36 | ககர வருக்கம் | 36 குணமது கைவிடேல். |
| 37 | ககர வருக்கம் | 37 கூடிப் பிரியேல். |
| 38 | ககர வருக்கம் | 38 கெடுப்பது ஓழி |
| 39 | ககர வருக்கம் | 39 கேள்வி முயல். |
| 40 | ககர வருக்கம் | 40 கைவினை கரவேல். |
| 41 | ககர வருக்கம் | 41 கொள்ளை விரும்பேல். |
| 42 | ககர வருக்கம் | 42 கோதாட்டு ஒழி. |
| 43 | ககர வருக்கம் | 43 கௌவை அகற்று. |
| 44 | சகர வருக்கம் | 44 சக்கர நெறி நில். |
| 45 | சகர வருக்கம் | 45 சான்றோர் இனத்து இரு. |
| 46 | சகர வருக்கம் | 46 சித்திரம் பேசேல். |
| 47 | சகர வருக்கம் | 47 சீர்மை மறவேல். |
| 48 | சகர வருக்கம் | 48 சுளிக்கச் சொல்லேல். |
| 49 | சகர வருக்கம் | 49 சூது விரும்பேல். |
| 50 | சகர வருக்கம் | 50 செய்வன திருந்தச் செய். |
| 51 | சகர வருக்கம் | 51 சேரிடம் அறிந்து சேர். |
| 52 | சகர வருக்கம் | 52 சையெனத் திரியேல். |
| 53 | சகர வருக்கம் | 53 சொற் சோர்வு படேல். |
| 54 | சகர வருக்கம் | 54 சோம்பித் திரியேல். |
| 55 | தகர வருக்கம் | 55 தக்கோன் எனத் திரி. |
| 56 | தகர வருக்கம் | 56 தானமது விரும்பு. |
| 57 | தகர வருக்கம் | 57 திருமாலுக்கு அடிமை செய். |
| 58 | தகர வருக்கம் | 58 தீவினை அகற்று. |
| 59 | தகர வருக்கம் | 59 துன்பத்திற்கு இடம் கொடேல். |
| 60 | தகர வருக்கம் | 60 தூக்கி வினை செய். |
| 61 | தகர வருக்கம் | 61 தெய்வம் இகழேல். |
| 62 | தகர வருக்கம் | 62 தேசத்தோடு ஒட்டி வாழ். |
| 63 | தகர வருக்கம் | 63 தையல் சொல் கேளேல். |
| 64 | தகர வருக்கம் | 64 தொன்மை மறவேல். |
| 65 | தகர வருக்கம் | 65 தோற்பன தொடரேல். |
| 66 | நகர வருக்கம் | 66 நன்மை கடைப்பிடி. |
| 67 | நகர வருக்கம் | 67 நாடு ஒப்பன செய். |
| 68 | நகர வருக்கம் | 68 நிலையில் பிரியேல். |
| 69 | நகர வருக்கம் | 69 நீர் விளையாடேல். |
| 70 | நகர வருக்கம் | 70 நுண்மை நுகரேல். |
| 71 | நகர வருக்கம் | 71 நூல் பல கல். |
| 72 | நகர வருக்கம் | 72 நெற்பயிர் விளைவு செய். |
| 73 | நகர வருக்கம் | 73 நேர்பட ஒழுகு. |
| 74 | நகர வருக்கம் | 74 நைவினை நணுகேல். |
| 75 | நகர வருக்கம் | 75 நொய்ய உரையேல். |
| 76 | நகர வருக்கம் | 76 நோய்க்கு இடம் கொடேல். |
| 77 | பகர வருக்கம் | 77 பழிப்பன பகரேல். |
| 78 | பகர வருக்கம் | 78 பாம்பொடு பழகேல். |
| 79 | பகர வருக்கம் | 79 பிழைபடச் சொல்லேல். |
| 80 | பகர வருக்கம் | 80 பீடு பெற நில். |
| 81 | பகர வருக்கம் | 81 புகழ்ந்தாரைப் போற்றி வாழ். |
| 82 | பகர வருக்கம் | 82 பூமி திருத்தி உண். |
| 83 | பகர வருக்கம் | 83 பெரியாரைத் துணைக் கொள். |
| 84 | பகர வருக்கம் | 84 பேதைமை அகற்று. |
| 85 | பகர வருக்கம் | 85 பையலோடு இணங்கேல். |
| 86 | பகர வருக்கம் | 86 பொருள்தனைப் போற்றி வாழ். |
| 87 | பகர வருக்கம் | 87 போர்த் தொழில் புரியேல். |
| 88 | மகர வருக்கம் | 88 மனம் தடுமாறேல். |
| 89 | மகர வருக்கம் | 89 மாற்றானுக்கு இடம் கொடேல். |
| 90 | மகர வருக்கம் | 90 மிகைபடச் சொல்லேல். |
| 91 | மகர வருக்கம் | 91 மீதூண் விரும்பேல். |
| 92 | மகர வருக்கம் | 92 முனைமுகத்து நில்லேல். |
| 93 | மகர வருக்கம் | 93 மூர்க்கரோடு இணங்கேல். |
| 94 | மகர வருக்கம் | 94 மெல்லி நல்லாள் தோள்சேர். |
| 95 | மகர வருக்கம் | 95 மேன்மக்கள் சொல் கேள். |
| 96 | மகர வருக்கம் | 96 மைவிழியார் மனை அகல். |
| 97 | மகர வருக்கம் | 97 மொழிவது அற மொழி. |
| 98 | மகர வருக்கம் | 98 மோகத்தை முனி. |
| 99 | வகர வருக்கம் | 99 வல்லமை பேசேல். |
| 100 | வகர வருக்கம் | 100 வாது முற்கூறேல். |
| 101 | வகர வருக்கம் | 101 வித்தை விரும்பு. |
| 102 | வகர வருக்கம் | 102 வீடு பெற நில். |
| 103 | வகர வருக்கம் | 103 உ(வு)த்தமனாய் இரு. |
| 104 | வகர வருக்கம் | 104 ஊ(வூ)ருடன் கூடி வாழ். |
| 105 | வகர வருக்கம் | 105 வெட்டெனப் பேசேல். |
| 106 | வகர வருக்கம் | 106 வேண்டி வினை செயேல். |
| 107 | வகர வருக்கம் | 107 வைகறைத் துயில் எழு. |
| 108 | வகர வருக்கம் | 108 ஒ(வொ)ன்னாரைத் தேறேல். |
| 109 | வகர வருக்கம் | 109 ஓ(வோ)ரம் சொல்லேல். |